பார்வை
நான் பார்க்காத போதெல்லாம் -நீ
என்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
சொல்கிறது என் மனசாட்சி -ஏனென்றால்
நீ பார்க்காத போதெல்லாம்-நான்
உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் !
உன்னை வைத்து என்ன செய்ய போகிறாய்?
போயும், போயும் ....
என் இதயத்தை நீ கேட்க்கிறாய்....
இதயத்தில் இருப்பது நீ தானே
உன்னை வைத்துக்கொண்டு ....
என்ன செய்வாய் நீ.....?
உயிர் வலிக்கின்றதே .............
உன்னை நானும்
நினைப்பதை யாரும்
தடுக்கின்ற வேளை
துடிக்கும் .
இதயம்
வேலை நிறுத்தம்
செய்கின்றதே
உயிர் வலிக்கின்றதே .....
நண்பா . . . நான் . . .
நண்பா . . .
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து ... தயங்கித் தயங்கி
தான் பேசுகிறாள் .. .
நான் சொன்ன ஒரு வார்த்தையால் ...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று...
என்ன செய்வதென்பது
தெரியாமல் நான் . . .
கட்டாயத் திருமணம்
கட்டாயத் திருமணம்
லட்சங்கள் பல
கொட்டிக் கொடுத்தார்கள்
கொடுக்கவில்லை அழகான என்னவளை . . .
இதயம் . . .
இமைகள் மூடித்திறந்த போதும்
இடிகள் உதயமான போதும் - என்
இதயம் தூங்கவில்லை
உறவுகள் உதயமான போதும்
உரிமையை தேடிய போது - என்
உள்ளம் ஏங்கவில்லை
அன்பே!
உன்னை நினைத்த போது - என்
உள்ளம் ஏங்கியது
நீ
என்னை ஏற்க மறுத்து
இடறித் தள்ளிய போது - என்
இதயம் தூங்கியது . . .
சொல்லாத காதல்...
உலகமெல்லாம்
சொல்லி விட்டேனடி
உன்னை காதலிக்கிறேன் என்று
உன்னிடம் மட்டும் சொல்லாமல்....
உன்னாலே......
எந்த இசையும்
பிடிக்கவில்லை,
உன் குரலை
கேட்ட பின்பு.. .
எந்த சுவையும்
பிடிக்கவில்லை
உன் இதழை
சுவைத்த பின்பு...
எந்த பெயரும்
பிடிக்கவில்லை
உன் பெயரை
கேட்ட பின்பு...
எந்த பெண்ணையும்
பிடிக்கவில்லை
உன்னை
பார்த்த பின்பு...
காதலே...
பிடிக்கவில்லை
"நீ"
ஏமாற்றிய பின்பு...?
ஓர் தூய இதயமுள்ள பெண்ணைத்தேடி !!!!
உன்னைக் காக்கும் ஓர் உயிரானேன் - உன் மீது கொண்ட காதலால் !!!
நீ வீசிய சொல்லம்புகள் என்னை வறுத்தியதே தவிர- என் இதயத்தையல்ல !!!
ஓர் பார்வை போதுமென்று உன் பின் அலைந்தேன் - ஒர் வாயில்லா ஜீவன் போல் !!!
என் இதயமாளிகையின் அரசியாய் உன்னை எண்ணினேன் நேற்றுவரை !!!
இன்றுடன் நான் வெறுக்கிறேன் உன்னை- என் உயி உடல் அனைத்திலுமாக !!!
ஏனெனில் நீ கொச்சைப்படித்தியது என்னையல்ல- நான் உன்மீது கொண்ட மட்டற்ற காதலை !!!
நான் இன்று வெட்கப்படுகிறேன் - ஓர் இதயமற்ற ஓர் பெண்ணை நேசித்ததற்காக !!!
மீண்டும் ஆரம்பிக்கிறேன் என் காதல் பயணத்தை- ஓர் தூய இதயமுள்ள பெண்ணைத்தேடி !!!!
என்னவள்
”இதய துடிப்பு,
அதிகமாக ஆகிறது...
என்னவள் என்னை பார்க்காதபோது”
முதல் காதல் கடிதம்
”நான் படித்த முதல்,
காதல் கடிதம்,
உன் ‘கண்கள்’ தான்
அழகு
அமாவாசையிலும்
பெ௱ர்ணமியாய் !!!!!
அவள் முகம் !!!!!!!!!
கவிதை
”ஒரு வரி ‘கவிதை’
நீ!,,
உன்னை ஒவ்வொரு வரியும்,
’கவிதையாய்’ எழுதுவது,
நான்!....
பிழை
இறைவன் செய்த பிழை
அவள் மேல் முதலில்
எனக்கு வந்த காதல் .
உணர தவறியது
அவள் பிழை .
சொல்ல தவறியது
என் பிழை
நினைவுகள் தொடரும்
நான் இங்கு
இருக்கும் வரையல்ல
இறக்கும்வரை உன்னை நினைத்துக்கொண்டும்
நேசித்துக்கொண்டும் தான் இருப்பேன்...!
நீ என்னை மறந்தாலும் ..!
நீ என்னை வெறுத்தாலும்............!!!!!!!
பயம்
”உலகமே அழியப்போகிறதாம்!...
பயமாகதான் இருக்கிறது,
இன்னும் அவள் என்,
காதலுக்கு, பதில் சொல்லாமல்!...
மெளமாக இருப்பதை,
நினைத்து.....
அழகாயிருக்கிறது..
உன்னை நினைத்து
கொண்டிருப்பதை போலவே
அழகாயிருக்கிறது..
நீயும் என்னைத்தான்
நினைதுக்கொண்டிருப்பாய்
என்று நினைத்துக்கொள்வது..
உண்மைக் காதல்
வார்த்தைகள்
பரிமாறப்படாமல்
செத்தது
"உண்மைக் காதல்"